Matthew 19:26
“With man this is impossible, but with God all things are possible.”
Jesus Christ, John 3:16-17
“For God loved the world so much that he gave his one and only Son, so that everyone who believes in him will not perish but have eternal life. God sent his Son into the world not to judge the world, but to save the world through him.”
.
.
Tamil Good News!
Previous
Next

நீங்கள் வாசிக்க

யாழ் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேச ஆயராக பணியாற்றிய ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் நடை பெற்றது.
யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்து ஆயர் அவர்களின் உருவச்சிலையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
யாழ் மறைமாவட்டத்தின் மூத்தகுரு அருட்திரு இம்மானுவேல் அவர்கள் ஆயர் அவர்களின் விபரங்கள் அடங்கிய நினைவுக்கல்லை திறந்து வைத்தார்.
ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் மறைவின் 50வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் குருக்கள் துறவிகள் இறைமக்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆயர் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகை அவர்கள் தமது பணிக்காலத்தில் யாழ். மறைமாவட்டத்தில் அளப்பரிய பணிகள் ஆற்றியவர் என்பதுடன் இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவரே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குழந்தை இயேசு பெருநாள் ஞாயிறு திருப்பலி 15- 01- 2023

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் புதுவருட திருப்பலி

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கிறிஸ்து பிறப்பு விழா படங்கள்

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம்திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி 18- 12- 2022

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கோடைகால ஒன்றுகூடல் 2022

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த பங்காக திகழும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கில் ஒன்பதாவது அருட்சகோதரியாக நல்லாயன் சபையில் இணைந்து தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணம் அதாவது நித்திய வாக்குத்தத்தம் செய்து கொண்ட பேசாலையைச் சேர்ந்த திரு திருமதி தார்சீஸ் குலாஸ் தம்பதினரின் புத்திரி அருட்சகோதரி பிறேமி குலாஸ் அவர்களை பேசாலை சமூகம் புதன்கிழமை (03.08.2022) மாலை மாபெரும் வரவேற்பு நிகழ்வை மேற்கொண்டதுடன்
இவ் அருட்சகோதரியை பேசாலையிலிருந்து இறைவன் தனது திராட்சை தோட்டத்தில் இறை பணிக்காகவும் சமூகப் பணிக்காகவும் அழைத்தமைக்காக கூட்டுத்திருப்பலியில் பேசாலை சமூகம் ஒன்றிணைந்து நன்றி திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்
தற்பொழுது தேசிய பாடசாலையாக விளங்கும் மன் பற்றிமா மகா வித்தியாலயத்தில் இவ் அருட்சகோதரி கல்வி கற்றபொழுது அவரின் சக மாணவர்களும் புனித வெற்றி நாயகி ஆலய பேரவையும் வாழத்துப்பாக்கள் பாடி பரிசில்கள வழங்கிய நிகழ்வையும் பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் உரையாற்றுவதையும் காண்கின்றீர்கள்.
(தமிழ் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் இலங்கை செய்தியாளர்
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த பங்காக திகழும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கில் ஒன்பதாவது அருட்சகோதரியாக நல்லாயன் சபையில் இணைந்து தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணம் அதாவது நித்திய வாக்குத்தத்தம் செய்து கொண்ட பேசாலையைச் சேர்ந்த திரு திருமதி தார்சீஸ் குலாஸ் தம்பதினரின் புத்திரி அருட்சகோதரி பிறேமி குலாஸ் அவர்களை பேசாலை சமூகம் புதன்கிழமை (03.08.2022) மாலை மாபெரும் வரவேற்பு நிகழ்வை மேற்கொண்டதுடன்
இவ் அருட்சகோதரியை பேசாலையிலிருந்து இறைவன் தனது திராட்சை தோட்டத்தில் இறை பணிக்காகவும் சமூகப் பணிக்காகவும் அழைத்தமைக்காக கூட்டுத்திருப்பலியில் பேசாலை சமூகம் ஒன்றிணைந்து நன்றி திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்
தற்பொழுது தேசிய பாடசாலையாக விளங்கும் மன் பற்றிமா மகா வித்தியாலயத்தில் இவ் அருட்சகோதரி கல்வி கற்றபொழுது அவரின் சக மாணவர்களும் புனித வெற்றி நாயகி ஆலய பேரவையும் வாழத்துப்பாக்கள் பாடி பரிசில்கள வழங்கிய நிகழ்வையும் பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் உரையாற்றுவதையும் காண்கின்றீர்கள்.

அருட்பணி யூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட அமெரிக்க நாடான கனடாவிற்கு 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு இவ்வாரம் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
இப்பயணத்தை “தவத் திருப்பயணம்” என குறிப்பிட்டு திருத்தந்தை அவர்கள் 25ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கனடாவின் மஸ்குவாசிஸ் (Maskwacis) பகுதியிலும், எட்மன்டன் நகரிலும் நிறைவேற்றிய நிகழ்வுகளில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களில், பொதுவாக அந்நாடுகளின், அரசு மற்றும், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் போன்றோரைச் சந்தித்து அவர்களுக்கு உரையாற்றுவது முதல் பயண நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆனால், கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை முதலில் அந்நாட்டு பூர்வீக இனங்களின் மக்களை, இரு இடங்களில் சந்தித்து உரையாடியுள்ளார். அத்துடன் பூர்வீக இனச் சிறாருக்கென நடத்தப்பட்ட மாணவர் விடுதிப் பள்ளிகளிலிருந்து இறந்த சிறாரின் கல்லறைகளை தரிசித்து அவர்களுக்காகவும் செபித்தார்.

புனித அந்தோனியாரின் திருவுடலின் திருப்பண்டம் ரோமாபுரியில் இருந்து மன்னார் மறைமாவட்டத்திற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் தந்தை அவர்களினால் கொண்டுவரப்பட்டு, தற்போது அந்த திருப்பண்டம் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனியாக மன்னார் மதவாச்சி பிரதான வீதி வழியாக மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது பெரிய யாத்திரை ஸ்தலமாகிய பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கும் பொருட்டும். இவ்வாண்டுக்கான பெரியகட்டு அந்தோனியார் ஆலய கொடியேற்ற தினமாகிய இன்றைய தினம் பவணியாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தியாவின் கோவா நாட்டிலிருந்து நெடுந்தீவிற்கு கொண்டு வரப்பட்ட புனித சவேரியாரின் திருப்பண்டம் கடந்த 20ஆம் திகதி நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டு வழிபாடுகள் அங்கு நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்திரு விமலசேகரன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்திரு ஜெயசேகரம் அவர்கள் திருப்பலி ஒப்புக் கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் புனிதரின் திருப்பண்டம் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி புனித நீக்கொலஸ் ஆலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான கிறிஸ்தோப்பர் வின்சன்ஸ்லோஸ், கர்சதன் ரிச்சட்சன் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள சின்ன மடு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆவணி மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான நவநாள் வழிபாடுகள் 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
அன்னையின் திருநாள் திருப்பலி 5ஆம் திகதி வருகின்ற வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் காலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவிற்கு வருகை தரவுள்ள அன்னையின் பக்தர்களுக்காக போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக சின்னமடு யாத்திரைத்தல பரிபாலகர் அருட்திரு அஜந்தன் அவர்கள் எமது செய்திபிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் காலை 5.30 மணியில் இருந்து யாழ் பேருந்து நிலையத்திலிருந்தும் தீவகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். அஞ்சனந்தாழ்வு பங்கிலுள்ள திருப்பாலத்துவ சபை சிறார்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அஞ்சனந்தாழ்வு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.பங்குத்தந்தை அருட்திரு செபஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்திரு அன்ரன் றொக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 34 சிறார்களுக்கு திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் மறைமாவட்ட இயக்குனர் அருட்திரு எயின்சிலி றொசான் அவர்கள் நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டி வைத்தார்.
யாழ், குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா 25ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.நற்கருணை விழாத் திருப்பலியை யாழ் புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்திரு மவுலீஸ் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக் கொடுத்தார். திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் அங்கு இடம்பெற்றது.
புனிதபற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகத்தில் புனித சுவக்கீன் அன்னம்மாள் பெருநாள் திருப்பலி அருட் தந்தை கனிஸ்சியஸ் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது பெருநாள் திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி .
புனிதபற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகத்தில் புனித சலேசியார் பெருநாள் திருப்பலி அருட் தந்தை பீட்டர் ஜெத்தேந்திரன் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது பெருநாள் திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி .

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியக மக்கள் சனிக்கிழமை மாலை யாழ் குருமுதல்வருடன்

நானாட்டான் பங்கின் தலை ஆலயமாக திகழும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவானது இன்றைய தினம் 10.07.2022 ஞாயிற்றுக் கிழமை காலை பங்குத்தந்தை அருட்பணி L.சுரேந்திரன் றெவல் அடிகளாரின் நெறிப்படுத்தலின் கீழ் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலியினை சிறப்பித்து இறையாசீர் வழங்கினார்கள்.
திருப்பலி நிறைவில் ஆரோக்கிய அன்னையின் திருச்சுருப பவனி இடம் பெற்று அன்னைக்கு கவிகள் இசைக்கப்பட்டு, ஆர்ப்பரிப்புக்கள், செபங்கள் சொல்லப்பட்டு இறுதியில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்து நாயகம் அடிகளாரினால் இறைமக்கள் அனைவருக்கும் அன்னையின் இறையாசீர் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அயன்சீல்டன் கறுப்பு மாதா திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.06.2022 அன்று நண்பகல் 12.00 மணிக்கு திருச்செபமாலை பவனியும், அதனை தொடர்ந்து பிற்பகல் 12:30 மணிக்கு திருவிழா திருப்பலியும் இடம்பெற்றது.
சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் இயக்குனர் அருட்பணி சூ.டக்லஸ் அடிகளாரின் ஒழுங்குப்படுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், வவுனியா கோமரசன் குள கல்வாரி திருத்தலத்தின் பரிபாலகருமான அருட்பணி றொஷான் அடிகளார் தலைமை தாங்கி ஒப்புகொடுக்க அவரோடு இணைந்து அருட்பணி வின்சன் அடிகளாரும் , அருட்பணி டக்லஸ் அடிகளாரும் திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருபம் ஆலய முன்றலில் அலங்கரிக்கப்பட்ட வீதியூடாக பவனியாக எடுத்துவரப்பட்டு அன்னையின் பரிந்துரை செபங்களும் ,ஆர்ப்பரிப்புக்களும் பாடப்பட்டு இறுதியில் அருட்தந்தை வின்சன் அடிகளாரினால் அன்னையின் திருச்சுருப இறையாசீர் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.
அன்னையின் பரிந்துரையால் இவ் வருடம் திருவிழா மிகவும் சிறப்பாக இறைமக்களின் வருகையோடு இடம் பெற்றது.
சுவிஸ் நாட்டில் எழில் மிகு தோற்றத்துடன் அயன்சீல்டன் திருத்தலத்தில் குடிகொண்டுள்ள கறுப்பு மாதாவின் இறையருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதாக.

அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருஅவை's album

முல்லைப்பங்கு கார்லோ இளையோர் ஒன்றியம் நடாத்திய 2022 ஈஸ்டர் பெருவிழா நிகழ்வு கடலில் நடைபெற்றபோது 40 வலுக்கொண்ட யமஹா 25 வலுக்கொண்ட சுஷுகி படகோட்டம் மாலையில் முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய முன்றலில் நடைபெற்ற ஏனைய மகிழ்விக்கும் நிகழ்வுகள்: கயிறு இழுத்தல், தலையணை சண்டை, கிடுகு பின்னுதல், தேங்காய்துருவுதல் பலூன் ஊதி உடைத்தல், பலூன் காலில்கட்டி அடித்து உடைத்தல் சுற்றுதே பூமி, முட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், தாரா நடை கண்கவரும் மனதுக்கு மகிழ்வைத்தரும் நிகழ்வுகளும் பரிசில் வழங்கலும் நடைபெற்ற போது கிடைத்த பதிவுகள் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் இளையோரின் அடுத்த படைப்பு மிக விரைவில்

சுவாமி தோட்டத்தில் தேங்காய் எண்ணை உற்பத்தி ஆலை 09-04-2022 அன்று திரு. ஜெயரட்ணம்(coordinator, Pax Christy) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இதற்கான இயந்திரங்களை Pax Christy வழங்கியிருந்தது.Your Heading Text Here

இன்று (30-01-2022) எமது ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பாலத்துவ சபை விழா

இன்றைய தினம் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உறுதிப்பூசுதல் நிகழ்வு…

அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருஅவை

நற்கருணை புதுமைகள்

நற்கருணை புதுமைகள்

பாவத்தோடு நன்மை வாங்கின ஒரு பெண் ஒரு கிணற்றில் அதைப் போட்டதினால் அந்தக் கிணற்றுத்தண்ணீரால் நடந்த புதுமை
ப்ரசெல்ஸ் நகரில் ஒரு யூதன் வீட்டில் ஒரு கிறிஸ்தவ வேலைக்காரி இருந்தாள் . அந்த யூதனின் துர்புத்தி கேட்டு அவள் யூத மதத்தில் சேர்ந்ததுமல்லாமல் தேவநற்கருணையில் இயேசுநாதர் இல்லையென்று நினைத்திருந்தாள் . அவளுடைய எசமான் ஒருநாள்அவளைப் பார்த்து ” மற்ற கிறிஸ்தவர்களைப்போல் நீயும் உண்மையான கிறிஸ்தவள் போல் நடித்துக் கோவிலுக்கு போய் நன்மை வாங்க வேண்டும் . அந்தத் திவ்ய நற்கருணையை நீ உட்கொள்ளாமல் உடனே எடுத்து எனக்கு கொண்டு வர வேண்டும் ” என்று சொன்னான் .
அதற்கு அவள் சம்மதித்து கோவிலுக்குப் போய்த் தேவநற்கருணை வாங்கினாள் . அவளுடைய நாவில் குருவானவர் தேவநற்கருணையை வைத்தவுடனே அவள் அந்தத் தேவநற்கருணையை எடுக்கத் துணிந்தாள். உடனே அவளுடைய ஈரற்குலையில் கடினமான வலி ஏற்பட்டதினால் அவஸ்தைகாரிபோல் இருந்தாள் . அவள் தன் பாவத்துக்கு தண்டணையாக அந்த வேதனை வந்தது என்று நினைத்து அதை மற்றவர்கள் அறியாத படிக்குத் தான் வாந்தி பண்ணுகிறாப்போல்நடித்து வெளியிலே வந்து கோவிலருகிலிருக்கிற கிணற்றினருகே போய் சற்று நின்றாள் . இப்படி நின்றபோது அவளுக்குமீண்டும் அகங்காரம் ஏற்படவே தேவநற்கருணையைக் கிணற்றுக்குள்ளே போட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போனாள் .
🌹 கிணற்றில் நற்கருணை விழுந்ததின் பயனாக அநேகப் புதுமைகள் நடந்தன . அந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடித்ததால் வியாதிக்காரர்கள் குணமடைந்தனர் . இதனால் அந்த ஊரிலுள்ள அநேகம் வியாதிக்காரர்கள் இந்தக் கிணற்றினிடம் திரண்டு வந்தார்கள் . இதையெல்லாம் கண்ட அந்தவேலைக்காரி தான் செய்த தூரோகத்திற்கு மனஸ்தாபப்பட்டு நடந்த சேதியெல்லாம் மற்றவர்கள் அறியப் பண்ணிணாள் . குருக்களும் மற்றவர்களும் இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனைப் பண்ணி அந்தக் கிணற்று தண்ணீரெல்லாம் வெளியில் இரைத்து விட்டு கிணற்றைப் பார்க்கிறபோது வெகு நேர்த்தியான பாடுபட்ட சுருபம் ஒன்று அதிலே இருக்கிறதைக் கண்டார்கள் . அதை வெளியில் எடுத்து மகா மகிமையோடு கோவிலில் வைத்தார்கள் . அந்தச் சுருபத்தின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்தன .
இறைமக்களே ! இப்போது சொல்லப்பட்ட பெண் துர்ப்புத்திக் கேட்டதினால் கெட்டுப்போனாள். ஆகையால் பதிதர்களும், பாவிகளும் சொல்லுகிற துர்ப்புத்திக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டாம். தேவநற்கருணையை நல்ல ஆயத்தத்தோடு நீங்கள் வாங்கின பிறகு அதில் இருக்கிற இயேசுநாதரைப் பார்த்து எங்கள் ஆத்துமத்துக்கு ஞான வைத்தியரே , எங்களிடத்தில் கோபமும், ஆங்காரமும், காய்மாகரமும், போசனபிரியமும் தேவகாரியங்களில் சோம்பலும் இவைமுதலான வியாதிகள் இருக்கின்றன என்று சொல்லிக் காட்டி ” தேவரீர் அந்த வியாதிகளை நீக்கி எங்களுக்கு ஞான சஞ்சீவியாய் இரும் ” என்று மன்றாடவேண்டும் . நீங்கள் இப்படி கெஞ்சினால் அவர் உங்கள் வியாதியைத் தீர்க்க வந்திருப்பதால் உங்கள் ஆத்துமத்தின் வியாதி நீங்கிப் போவதற்கு அவர் அருள் புரிவார் .
ஆமென்🙏🌹

தமிழ்ச் சமூகம் பெற்றெடுத்த உன்னத அடையாளங்களேஒரே நாளில்காலையிலும் மாலையிலுமாகபெரும் துயர் தந்துமறைந்து போனீர்களோ…நெஞ்சம் நிறைந்ததுயரோடுகலஙகித்தவிக்கின்றோம்.உங்கள்ஆளுமைத்திறன்களால்நாம் மகிழ்ந்திருந்த நாள்கள்இனி இல்லைஎன்றுஆனதுவோ.

அருட்காலநிதி மரிய சேவியர் அடிகளாரின் அஞ்சலி நிகழ்வு

அமரத்துவம் அடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் உடல் யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுஉள்ளது.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை
01. 04 .2021 வியாழக்கிழமை இன்று இறைபதம் அடைந்து விட்டார். பல நெருக்கடியான காலகட்டத்தில் நல்லாயனாக பணியாற்றி ஈழத்தமிழர் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஆயரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடி அவரை அஞ்சலிப்போம்.

மக்களின் பார்வைக்கு வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏனெனில் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் என்று அப்பெண் எண்ணிக்கொண்டார் [மாற்கு 5:28 ] ஆண்டவர் அணிந்த ஆடையை கண்டு கொண்டதே மகிழ்ச்சி.

29/03/2021 இன்று மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள தூய மரியாள் பேராலயத்தில் திருத்தைலம் ஆசீர்வதிக்கும் புனித சடங்கானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

திருத்தைல மந்திரிப்பு சடங்கு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இன்று 29.03.2021 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர்அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இத்திருப்பலியில் யாழ். மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் பங்குபற்றினார்கள்.

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தினால் ஆற்றுகை செய்யப்பட்ட “களங்கம்” திருப்பாடுகளின் நாடகம் இம்முறை தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களூடாக மிகவும் சிறப்பான முறையில் பக்தி பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட கலைஞர்களைக்கொண்டு சிறந்த நெறியாள்கையுடன் மேடையேற்றப்பட்ட இத்தவக்கால ஆற்றுகை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

– St. Patrick’s Day 2021 –
St. Patrick’s Day was celebrated on a minor scale today. Due to the Covid-19 restrictions, the Festive Masses were offered in four different sections of the College (including the Cathedral). A very few retired teachers and old boys attended the mass in the Chapel. Students were in their school uniform as classes were conducted today after the mass. During the interval, students enjoyed refreshments with respective class teachers in their classrooms.
நான் உங்களிடம் சமாதான யாத்ரீகனாக வந்தேன் ′ திருத்தந்தை 1ம் பிரான்சிஸ்
மூன்று நாள் அப்போஸ்தலிக்க உத்தியோகபூர்வ விஜயத்திற்கான அமைதியின் பிரதிநிதியாக, ஈராக்கிற்கு வந்த போப் பிரான்சிஸ் இன்று நாட்டிற்கு வரவேற்றார், பிராந்தியத்தில் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் துன்புறுத்தலுக்கு ஆன்மீக மற்றும் மன வலிமையை வழங்கினார்.

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கோரோணா தொற்றிற்குள்ளாகி மரணித்த முஸ்லிம் ஜனாசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 07.03.2021 நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆலயங்களிலும் நடைபெற்றுள்ளது. இப்போராட்டம் இரணைதீவு மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோரோணா தொற்றிற்குள்ளாகி மரணித்த முஸ்லிம் ஜனாசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 07.03.2021 நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆலயங்களிலும் நடைபெற்றுள்ளது. இப்போராட்டம் இரணைதீவு மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுவைதீவு பங்கு புனித சின்னத்திரேசம்மாள் யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ‘கண்காட்சியும் வா்தகமும்’ என்ற நிகழ்வு இன்று 07.03.2021 காலை 8.15 மணிக்கு மாலை நேர படிப்பகத்தில் சிறப்புற இடம்பெற்றது. பங்குத்தந்தையும் தி௫க்குடும்ப மற்றும் தி௫ச்சிலுவை அ௫ட்சகோதாிகளும் இணைந்து இந்த நிகழ்வை ஆரம்பித்தனா். தொடர்ந்து பங்கு மக்களும் மாணவா்களும் கண்காட்சியை பாா்வையிட்டனா்.
இந்நிகழ்வில் சிறப்பு வி௫ந்தினா்களாக விாிவுரையாளா் கலாநிதி S. ஜெயசங்கா் அவா்களும் அவரது பாாியா௫ம் கலந்து சிறப்பித்தனர்.
அருட்தந்தை Petrus Andrews, கான்சர் நோயினால் பிடிக்கப்பட்டு, அவர் இறக்கும் தருவாயில் கூட, கட்டிலில் படுத்திருந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கும் காட்சியை நாங்கள் அனைவரும் இங்கு காண்கின்றோம். அவர் இறக்கும் தருவாயில் இருந்தும் கூட, தன்னை இறைவனோடு ஒப்பரவாக தவறவில்லை. ஒரு கத்தோலிக்கன் அவர்கள் குரு, துறவறத்தார் அல்லது பொதுநிலையினராக இருந்தாலும் கூட அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்காமல் அல்லது திருப்பலியில் பங்கு பெறாமல் வாழக்கூடாது. இதை தான் புனித மதர் தெரேசா, குருக்களை பார்த்து, நீங்கள் ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொரு திருப்பலியும், நீங்கள் ஒப்புக்கொடுக்கும் உங்கள் முதல் மற்றும் கடைசி திருப்பலி என நினைத்துக்கொண்டு ஒப்புக்கொடுங்கள் என்று சொல்கிறார்.
ஒரு கத்தோலிக்கனின் அது உயர் செபம் திருப்பலி ஆகும். அது குருட்கள் மற்றும் துறவியர்களாக இருந்தாலென்ன அல்லது பொது நிலையினராக இருந்தால் என்ன திருப்பலி எல்லாருக்கும் பொதுவான, அதியுயர் செபமாகும். குருக்களின் அதியுயர் பணி திருப்பலி ஒப்புகொடுப்பது, பொதுநிலையினரின் அதியுயர் கடமை திருப்பலியில் பங்குபெறுவதாகும்.
திருப்பலியிலே சென்று இயேசுவின் பாடுகளில் பங்குபற்றுவதும் மேலும், அந்த பாடுகளில் இயேசுவோடு எம்மை இணைத்துக்கொண்டு, தந்தைக்கு எம்மை அன்றாடம் ஒப்புக்கொடுப்பதே நாம் தினம் செய்யும் பலியாகும்.
யார் இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? கிறிஸ்து ஒப்புக்கொடுகிறார்.
கிறிஸ்து, யாருக்கு இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? அவர் வானகத்தந்தைக்கு இத்திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்.
யாருக்காக கிறிஸ்து இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? பாவிகளான எமக்காக இந்த திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறார்.
ஆகவே ஏன் நாங்கள் திருப்பலிக்கு போக வேண்டும்? தன்னை அப்ப வடிவில் எமக்கு உணவாகத்தந்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துவை நாம் எம் வாழ்வில் பெறவே, நாம் திருப்பலிக்கு போக வேண்டும். அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் இது உங்களுக்காக கை அளிக்கப்படும் எனது திருஉடல், திரு இரத்தம் என்று இயேசு தன்னை எமக்கு உணவாகத்தருகிறார். அதே போன்று அவர் “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.” [ யோவான் 6: 51] என்று தனது உடலை, இரத்தத்தை நாம் இவ்வுலகிலும், அதே போன்றே இறந்த பின் வானுலகத்திலும் உயிர் வாழ எமக்கு உணவாகத்தருகிறார்.
நான் எப்பொழுது திருப்பலிக்கு போக வேண்டும்? வருடத்தில் ஒரு முறையா? ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலா அல்லது ஒவ்வொரு நாளுமா? “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.✠ வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்”[யோவான் 6: 54 – 57]. திருப்பலியின் மகிமையை நாம் உணர்ந்தோம் என்றால், எமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், திருப்பலிக்கு சென்று கிறிஸ்துவை நாம் உயிர் வாழ உணவாக பெற்றுக்கொள்வோம்.
திருப்பலிக்கு நான் ஏன் போக வேண்டும்? கிறிஸ்துவை உணவாக பெற நான் திருப்பலிக்கு போகவேண்டும், கிறிஸ்துவை உணவாக பெற நான் எப்படி எனது இதய ஆலயத்தை வைத்துக்கொள்ள வேண்டும்? தூயதாக வைத்துக்கொள்ள வேண்டும், எனது இதய ஆலயத்தை தூயதாக வைத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? எனது இதய ஆலயத்தை தூயதாக வைத்துக்கொள்ள நான் நல்ல, முழுமையான மற்றும் குருவுக்கும் ஒன்றையும் மறைக்காத நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஏனெனில் புனித பாவிலு அடிகளார் சொல்வது போன்று, உனது உடல் இறைவன் வாழும் இல்லம் என்பதை நீ மறந்து விட்டாயா ?
திருப்பலியே இவ்வுலகில் ஒவ்வொரு கத்தோலிக்கனினதும் அதிஉயர் செபமாகும். புனித ஜோன் மரிய வியாணி, திருப்பலியின் மகிமையை நாங்கள் உண்மையாகவே உணர்ந்தோமென்றால், நாங்கள் மகிழ்ச்சியிலே உயிர் விடுவோம் என்று எமக்கு சொல்கிறார்.

கச்சதீவுத்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

70 பேருடன் மட்டும் கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் 70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் உட்பட 7,குருக்கள் 3,அருட்சகோதரிகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் என 70 பேர் மட்டும். பங்கு கொண்ட நிலையில் ஆராதனை வழிபாடு இடம்பெற்றது.

19.02.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த அருட்திரு G.E மேரி யோசப் அடிகளாரின் இறுதி சடங்கு திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 22.02.2021 திங்கட்கிழமை இன்று மதியம் 3.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயச்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருமறைக் கலாமன்றத்தின் வருடாந்த செயற்பாடுகளின் நிகழ்வொழுங்கில் முதலிடம் பெறுகின்ற திருப்பாடுகளின் நாடக ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் வைபவம் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின ஆரம்ப நாளாகிய நேற்று 17.02.2021 மாலை 4.30 மணிக்கு இல,17,மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் ‘கலைஞான சுரபி’ தியான இல்லத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான கலைஞர்களுடன் இடம்பெற்றது.
ஆண்டுதோறும் பிரமாண்டமான தயாரிப்பாக, நூற்றுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்பில், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் பல நாள்களுக்கு மேடையேற்றப்படுகின்ற இவ்வாற்றுகை கடந்த ஆண்டு’ கொரோனா’ வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் அமுலாகிய முடக்க நிலை காரணமாக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில் மேடையேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்த ஆண்டிலும் இந்த இடர்கால நிலை தொடர்கின்ற போதிலும் பிரமாண்டமான தயாரிப்பாக மேடையேற்ற முடியாது விட்டாலும் சிறிய அளவிலாவது மேடையேற்றலாம் என்ற நம்பிக்கையுடன் இதற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருள்திரு பா.யோ.ஜெபரட்ணம் அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியதுடன்,ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள நடிகர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுக்கான பிரதிகளையும்
வழங்கிச் சிறப்பித்தார்.
வழிபாடு, தலைமையுரை, மங்கல ஒளியேற்றல், ஆசியுரை, பிரதி வழங்குதல்,நன்றியுரை என்னும் ஒழுங்கில் இந்த நிகழ்வு நடந்தேறியது.
இவ்வாண்டு ‘களங்கம்” என்னும் நாடகமே மேடையேற்றப்படவுள்ளது. இது வழமையான திருப்பாடுகளின் காட்சிகளைப் போல் அமையாது மாறுபட்ட வடிவத்தில் குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்களின் பங்கேற்புடன் அமைந்திருக்கும்.திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரால் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்டு,மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகை இறுதியாக 1990ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தால் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டது.தற்போது மீண்டும் மேடையேற்றப்படவுள்ளது.இம்முறை இதற்கான நெறியாள்கையை யோ.யோண்சன் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.
இந் நிகழ்வில் திருமறைக் கலாமன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருள்திரு அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
16.02.2021 செவ்வாய்க்கிழமை இன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள கிளாரட் அகத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட சிற்றாலயம் யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ப.யோ.ஜெபரட்ணம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
காலை குருமுதல்வர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வருடம் கிளரீசியன் சபையினர் யாழ் திரு அவையில் இறையாட்சிப் பணியின் 25 வருடங்களை நிறைவு செய்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி 2021.
2021 தை மாதம் 25ம் திகதி தொடக்கம் இம்மாதம் (மாசி) 06ம் திகதி வரை கிளிநொச்சி முல்லைதீவு மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றிவரும் மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி யாழ். மறைக்கல்வி நிலையத்தில் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகிய இவ்வதிவிட பயிற்சியில் திருவிவிலியம், திருவழிபாடு. அருள் அடையாளங்கள், புனித மரியாள், புனிதர்கள் வணக்கம், வத்திக்கான் சங்க ஏடு அறிமுகம், திருஅவை சுற்றுமடல்கள், மறைக்கல்வி போதனாமுறை, ஆசிரிய ஆன்மீகம், மறை ஆசிரியர்களுக்கான ஊடகப்பயன்பாடு ஆகிய கற்கை நெறிகளுடன் தலைமைத்துவப் பயிற்சிகளும் வழங்கப்படடன. அத்துடன் பல்வேறு பங்குத்தளங்களில் இருந்து வருகை தந்திருந்த இப்பயிற்சியாளர்கள் ஒருவர் ஒருவரை அறிந்துகொள்வதற்கும். தம்மிடையே உறவை வளர்த்துக்கொள்வதற்கும் செயலமர்வுகள். குழுச்செயற்பாடுகள், நாடகப்பயிற்சி, தியானமுறைகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இவ்வாண்டு யாழ். மறைமாவட்டத்தில் அன்பிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் நம்பிக்கை வாழ்வை புதுப்பிக்கவும் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தவும் அன்பியம் தொடர்பான விளக்கங்களை அருட்பணியாளர்கள் மில்பர்வாஸ், லியோ ஆம்ஸ்ரோங் ஆகியோர் இப்பயிற்சியாளர்களுக்க வழங்கினார்கள். மேலும் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்தல், திருப்பலிக்கான முன்னுரை மன்றாட்டு எழுதுதல், திருவிவிலிய செப வழிபாடு தியானம், ஆகிய செயற்பாடுகளுக்கும் பயிற்றுவிக்கப்படடன .
திருவழிபாட்டில் திரு இசையின் முக்கியத்துவத்தை விளக்கி பாடல் பயிற்சியம் வழங்கப்பட்டது.
ஒருநாள் களப்பயணமாக சின்னமடு, சாட்டி யாத்தரைத் தலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பயிற்சியின் இறுதிநாளாகிய 06.02.2021 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நிலைய கேட்ப்போர் கூடத்தில் காலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது. யாழ். மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

முல்லைத்தீவு சிலாவத்தை பங்கில் அமைந்துள்ள வற்றாப்பளை புனித லூர்த்து அன்னை ஆலயம் அழகிய தோற்றத்துடன் புதிதாக நிர்மானிக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் புனித லூர்து அன்னை திருநாளுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளை ஆரம்பிப்பதன் அடையாளமான அன்னையின் கொடியும் ஆயர் அவர்களினால் ஏற்றிவைக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தையாக பணியாற்றிய அமரர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களினால் இவ்வாலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போதைய பங்குத்தந்தையாக பணியாற்றும் இந்தியா நாட்டை சேர்ந்த கப்புசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு அலெக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இவ்வாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அவரின் தலைமையில் இந்நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

Previous
Next
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு நேற்று (29) வெள்ளிக்கிழமைமாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார்.
வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை அவர்கள் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபத்தில் ஆசி பெற்றார்.
இதனையடுத்து மன்னார் நகர பகுதியில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீட பிரதி நிதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றதோடு நற்கருனை ஆசீர்வதமும் இடம் பெற்றது
நாவாந்துறை பங்கின் புதிய குருவாக அருட்பணி யேசுரட்ணம் அவர்கள் 24.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இத் திருப்பலியில் யாழ்.மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்பணி மெளலிஸ் அடிகளாருடன் இணைந்து எமது முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி எரிக் றொஷான் அவர்களும் புதிய அருட்தந்தையை வரவேற்று பணிப்பொறுப்பை வழங்கினார்கள்.
இப் பலியில் எமது மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி் ஜெபரட்ணம் அடிகளாரும் கலந்து சிறப்பித்தார். மேலும் இத் திருப்பலியில் இணனந்து அருட்தந்தையை வரவேற்ற புனித நீக்குலார் ஆலய அருட்பணி சபையினருக்கும் புனித மரியாள் ஆலய அருட்பணி சபையினருக்கும் பாடகர் குழாமினருக்கும் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது பங்கில் பணியாற்றி பிரியாவிடை பெற்று செல்லும் அருட்பணி எரிக் றொஷான் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரவித்துக்கொள்கிறோம்.அவருடைய பணி சிறக்க இறைவனை வேண்டி எம் செபங்களில் அவருக்காக மன்றாடுவோம்.
மேலும் புதிதாக பணியை தொடரும் எம் பங்குத்தந்தையின் பணி சிறக்கவும் மன்றாடுவோம்

இளவாலை புனித யாகப்பர் ஆலயம் புதிய பங்கானது.

இளவாலை பங்கின் ஒரு அங்கமாக இருந்து தற்போது 35 வருடங்களுக்கு பிற்பாடு ஒரு தனிப் பங்காக மாற்றப்பட்ட புனித யாகப்பர் ஆலய பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம் பெற்ற அருட்திரு ஜெயக்குமார் அவர்கள் 21.01.2021 வியாழக்கிழமை பணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் முன்னிலையில் இவர் தனது பணியை ஏற்றுக்கொண்டார்.இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்கில், இளவாலை புனித றீற்றன்னை ஆலயம், பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயம், வலித்துண்டல் புனித அன்னாள் ஆலயம் அத்துடன் மயிலங்கூடல் புனித வேளாங்கன்னி ஆலயம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.புதிய பங்கின் பங்குத் தந்தையாக பணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருட்திரு ஜெயக்குமார் அவர்களே இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும் நியமனம் பெற்றுள்ளார். இந்நிகழ்வுகள் இளவாலை பங்குத்தந்தையும் முன்நாள் இளவாலை மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்திரு யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் 1932 தொடக்கம் 1985 வரை மோலைத்தேய குருக்களுடன் இப்பங்கு தனிப் பங்காக இயங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டின் 46ஆவது அதிபராக திரு. ஜோசப் பைடன் 20.01.2021 பதவியேற்றார்.
அமெரிக்க வரலாற்றில் அதிபர் ஜான் கென்னடிக்குப்பிறகு அதிபராகப்பொறுப்பேற்கும் இரண்டாவது கத்தோலிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது குடும்பத்தின் பாவனையிலிருந்த 127 ஆண்டுகால பழமையான திருவிவிலியத்தின் மீது கைகளை வைத்து தனது பதவிப்பிரமாணத்தை புதிய அதிபர் மேற்கொண்டார்.
துணை அதிபராக 2009-2013 பதவியேற்ற போதும் திருவிலியத்தை சாட்சியாக வைத்தே பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார்.
செனட் சபை உறுப்பினராக பதவியேற்ற போதும் இத் திருவிலியத்தை சாட்சியாக வைத்தே பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சி வட்டக்கச்சி பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு சுதர்சன் அடிகளார் 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாசன் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
16.01.2021சனிக்கிழமை அன்று யாழ். மறைக்கோட்ட பங்கு மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்திரு மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வொன்றுகூடலில் அன்பிய ஆண்டு, புனித சூசையப்பர் ஆண்டு விளக்க உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன. அன்பிய ஆண்டு கருத்துரையை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களும் புனித சூசையப்பர் ஆண்டு கருத்துரையை அருட்திரு அஜந்தன் அவர்களும் வழங்கினர். கருத்தமர்வின் நிறைவில் யாழ் மறைக்கோட்ட பங்குகளின் ஒவ்வொரு பங்கிலிருந்தும் மறைக்கல்வி இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு கூழாமுறிப்பு பங்கின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் 15.1.2021 வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. அருட்திரு நிருபன் அவர்கள் பங்குத்தந்தையாக பணிபுரிந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இவ்வாலயம் அருட்திரு நிக்சன் கொலின்ஸ் அவர்களின் காலத்தில் அழகிய தோற்றத்துடன் முழுமை பெற்று திறந்துவைக்கப்பட்மை இங்குகுறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் குருநகர் பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு யாவிஸ் அடிகளார் 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று காலை 5.30 மணிக்கு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்டத்தில் இவ்வருடம் பிரகடனப்படுத்தியுள்ள அன்பிய ஆண்டை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.ஆயர் தலைமையில் காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மில்பர் வாஸ் (கிளறேசியன் சபை) அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், பிரதிநிதிகள், இறைமக்களென பலரும் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் அவர்களினால் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் அன்பிய கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு மில்பர் வாஸ் அவர்களினால் அன்பிய ஆண்டின் இலட்சினைக்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அன்பிய இணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டார்கள்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பங்கின் புதிய பங்குத்தந்தையாகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வராகவும் நியமனம்பெற்ற அருட்திரு அன்ரனிப்பிள்ளை அடிகளார் 16.1.2021 சனிக்கிழமை பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் மாலை நடைபெற்ற திருப்பலியில் முன்நாள் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யாவிஸ் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கரம்பொன் புனித செபஸ்ரியார் ஆலய #130ம் ஆண்டு நிறைவு தினம் (1890 – 2020 )130ம் ஆண்டு நிறைவில் கரம்பொன் பங்குத்தந்தை அருட்திரு P .பத்திநாதன் அடிகளாரின் பணிக்காலத்தில் புலம்பெயர் ஆலய பங்கு மக்களின் நிதிப்பங்களிப்புடன் புனித செபஸ்ரியார் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு யாழ்..ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் 14.01.2021 (வியாழக்கிழமை) அன்று ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ்.மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி செயற்பாடுகளை வெவ்வேறு தளங்களில் முன்னெடுத்துவரும் மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குனர்களுக்கான வருட செயல்திட்டங்களை முன்மொழியும் கூட்டம் 13.1.2021 புதன்கிழமை ஆயர் தலமையில் நடைபெற்றது.ஆயர் இல்லத்தில் நடைபெற இக்கூட்டத்தில் ஒவ்வொரு ஆணைக்குழு இயக்குனர்களும் அன்பிய ஆண்டை அடிப்படையாகக் கெண்ட ஆண்டு செயற் திட்டங்களை முன்வைத்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

ஊர்காவற்றுறை பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு S.J.Q, ஜெயரஞ்சன் அடிகளார் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று பணிப்பெறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று காலை 7.00 மணிக்கு ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாவலன் பத்திரிகையின் ஆலோசகர் வட்டக் கூட்டம் 9.1.2021சனிக்கிழமை இன்று பாதுகாவலன் மண்டபத்தில் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்திரு S.A.றொஷான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதுகாவலன்பத்திரிகையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட குருக்கள் துறவிகள் பொதுநிலையினரென 30 பேர் பங்கெடுத்தனர். புதிய ஆண்டில் பாதுகாவலன் பத்திரிகையின் வளர்ச்சியை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட வோண்டிய பணிகள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
பத்திரிகையின் உள்ளடக்கம் வடிவமைப்பு விநியோகம் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
புதிய ஆண்டில் பாதுகாவலன் பத்திரிகையின் வளர்ச்சியில் எப்படியான செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட.ன.
அருட்திரு மேரிபஸ்ரியன் நினைவுநாள்.
யாழ் மறைமாவட்டக்குரு அமரர் மேரி பஸ்ரியன் அடிகள் 06.01.1985 அன்று வங்காலையில் படுகொலை செய்யப்பட்டார். இவரின் 35 வத நினைவு நாள் நேற்றைய தினமாகும்.
இவரின் நினைவு நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 06.01.2021 மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி. லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் நடைபெற்றது.
நினைவுத் திருப்பலியை அருட்தந்தை படுகொலை செய்யப்பட்ட வங்காலைப் பங்கைச் சேர்ந்த கிளரேசியன் சபை அருட்பணியாளர் A மில்பர்வாஸ் அடிகள் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.

05.01.2021 செவ்வாய்கிழமை ஊறணி, கங்கேசன்துறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் பிரான்ஸ் நாட்டின் துளிஸ் நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட புனித அந்தோனியர் திருச்சுருபம் யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாலை 4.30 மணிக்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் குரு முதல்வர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்றது. கடற்கரை வீதிப்பக்கமாக அமைக்கப்பட்ட புனிதரின் திருச்சுருபம் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் சில அன்பர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வுகள் ஊறணி பங்குத்தந்தை அருட்திரு T. E. தேவராஜன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றதுடான் புனிதரின் திருச்சுருபம் அமைக்கப்பட்ட அவ்விடத்தில் மீள்குடியேற்றத்தின் போது பங்கு பணிமனையை அடையாளப்படுத்த புனிதரின் திருச்சுருபம் அமைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குருத்துவ அபிஷேகத்தின் 48வது ஆண்டிலே மகிழும் எமது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை அன்போடு வாழ்த்துகின்றோம்.அவரின் பணி வாழ்வு சிறக்க மன்றாடுவோம்….

இன்று 85 வது பிறந்ததினம் காணும் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் அவர்களை வாழ்த்துகிறோம்..