குழந்தை இயேசு பெருநாள் ஞாயிறு திருப்பலி 15- 01- 2023
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் புதுவருட திருப்பலி
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கிறிஸ்து பிறப்பு விழா படங்கள்
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம்திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி 18- 12- 2022
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் கோடைகால ஒன்றுகூடல் 2022
அருட்பணி யூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா
புனித அந்தோனியாரின் திருவுடலின் திருப்பண்டம் ரோமாபுரியில் இருந்து மன்னார் மறைமாவட்டத்திற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் தந்தை அவர்களினால் கொண்டுவரப்பட்டு, தற்போது அந்த திருப்பண்டம் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனியாக மன்னார் மதவாச்சி பிரதான வீதி வழியாக மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது பெரிய யாத்திரை ஸ்தலமாகிய பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கும் பொருட்டும். இவ்வாண்டுக்கான பெரியகட்டு அந்தோனியார் ஆலய கொடியேற்ற தினமாகிய இன்றைய தினம் பவணியாக எடுத்துச் செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி புனித நீக்கொலஸ் ஆலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான கிறிஸ்தோப்பர் வின்சன்ஸ்லோஸ், கர்சதன் ரிச்சட்சன் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புனிதபற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகத்தில் புனித சுவக்கீன் அன்னம்மாள் பெருநாள் திருப்பலி அருட் தந்தை கனிஸ்சியஸ் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது பெருநாள் திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி .
புனிதபற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகத்தில் புனித சலேசியார் பெருநாள் திருப்பலி அருட் தந்தை பீட்டர் ஜெத்தேந்திரன் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது பெருநாள் திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி .
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியக மக்கள் சனிக்கிழமை மாலை யாழ் குருமுதல்வருடன்
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருஅவை's album
முல்லைப்பங்கு கார்லோ இளையோர் ஒன்றியம் நடாத்திய 2022 ஈஸ்டர் பெருவிழா நிகழ்வு கடலில் நடைபெற்றபோது 40 வலுக்கொண்ட யமஹா 25 வலுக்கொண்ட சுஷுகி படகோட்டம் மாலையில் முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய முன்றலில் நடைபெற்ற ஏனைய மகிழ்விக்கும் நிகழ்வுகள்: கயிறு இழுத்தல், தலையணை சண்டை, கிடுகு பின்னுதல், தேங்காய்துருவுதல் பலூன் ஊதி உடைத்தல், பலூன் காலில்கட்டி அடித்து உடைத்தல் சுற்றுதே பூமி, முட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், தாரா நடை கண்கவரும் மனதுக்கு மகிழ்வைத்தரும் நிகழ்வுகளும் பரிசில் வழங்கலும் நடைபெற்ற போது கிடைத்த பதிவுகள் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் இளையோரின் அடுத்த படைப்பு மிக விரைவில்
சுவாமி தோட்டத்தில் தேங்காய் எண்ணை உற்பத்தி ஆலை 09-04-2022 அன்று திரு. ஜெயரட்ணம்(coordinator, Pax Christy) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இதற்கான இயந்திரங்களை Pax Christy வழங்கியிருந்தது.Your Heading Text Here
இன்று (30-01-2022) எமது ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பாலத்துவ சபை விழா
இன்றைய தினம் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உறுதிப்பூசுதல் நிகழ்வு…
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருஅவை
நற்கருணை புதுமைகள்
நற்கருணை புதுமைகள்
தமிழ்ச் சமூகம் பெற்றெடுத்த உன்னத அடையாளங்களேஒரே நாளில்காலையிலும் மாலையிலுமாகபெரும் துயர் தந்துமறைந்து போனீர்களோ…நெஞ்சம் நிறைந்ததுயரோடுகலஙகித்தவிக்கின்றோம்.உங்கள்ஆளுமைத்திறன்களால்நாம் மகிழ்ந்திருந்த நாள்கள்இனி இல்லைஎன்றுஆனதுவோ.
அருட்காலநிதி மரிய சேவியர் அடிகளாரின் அஞ்சலி நிகழ்வு
அமரத்துவம் அடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் உடல் யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுஉள்ளது.
மக்களின் பார்வைக்கு வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏனெனில் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் என்று அப்பெண் எண்ணிக்கொண்டார் [மாற்கு 5:28 ] ஆண்டவர் அணிந்த ஆடையை கண்டு கொண்டதே மகிழ்ச்சி.
29/03/2021 இன்று மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள தூய மரியாள் பேராலயத்தில் திருத்தைலம் ஆசீர்வதிக்கும் புனித சடங்கானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
திருத்தைல மந்திரிப்பு சடங்கு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இன்று 29.03.2021 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர்அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இத்திருப்பலியில் யாழ். மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் பங்குபற்றினார்கள்.
யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தினால் ஆற்றுகை செய்யப்பட்ட “களங்கம்” திருப்பாடுகளின் நாடகம் இம்முறை தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களூடாக மிகவும் சிறப்பான முறையில் பக்தி பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட கலைஞர்களைக்கொண்டு சிறந்த நெறியாள்கையுடன் மேடையேற்றப்பட்ட இத்தவக்கால ஆற்றுகை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கோரோணா தொற்றிற்குள்ளாகி மரணித்த முஸ்லிம் ஜனாசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 07.03.2021 நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆலயங்களிலும் நடைபெற்றுள்ளது. இப்போராட்டம் இரணைதீவு மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கோரோணா தொற்றிற்குள்ளாகி மரணித்த முஸ்லிம் ஜனாசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 07.03.2021 நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆலயங்களிலும் நடைபெற்றுள்ளது. இப்போராட்டம் இரணைதீவு மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கச்சதீவுத்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
70 பேருடன் மட்டும் கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் 70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் உட்பட 7,குருக்கள் 3,அருட்சகோதரிகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் என 70 பேர் மட்டும். பங்கு கொண்ட நிலையில் ஆராதனை வழிபாடு இடம்பெற்றது.
19.02.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த அருட்திரு G.E மேரி யோசப் அடிகளாரின் இறுதி சடங்கு திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 22.02.2021 திங்கட்கிழமை இன்று மதியம் 3.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயச்தில் ஒப்படைக்கப்பட்டது.
மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி 2021.
2021 தை மாதம் 25ம் திகதி தொடக்கம் இம்மாதம் (மாசி) 06ம் திகதி வரை கிளிநொச்சி முல்லைதீவு மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றிவரும் மறையாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி யாழ். மறைக்கல்வி நிலையத்தில் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகிய இவ்வதிவிட பயிற்சியில் திருவிவிலியம், திருவழிபாடு. அருள் அடையாளங்கள், புனித மரியாள், புனிதர்கள் வணக்கம், வத்திக்கான் சங்க ஏடு அறிமுகம், திருஅவை சுற்றுமடல்கள், மறைக்கல்வி போதனாமுறை, ஆசிரிய ஆன்மீகம், மறை ஆசிரியர்களுக்கான ஊடகப்பயன்பாடு ஆகிய கற்கை நெறிகளுடன் தலைமைத்துவப் பயிற்சிகளும் வழங்கப்படடன. அத்துடன் பல்வேறு பங்குத்தளங்களில் இருந்து வருகை தந்திருந்த இப்பயிற்சியாளர்கள் ஒருவர் ஒருவரை அறிந்துகொள்வதற்கும். தம்மிடையே உறவை வளர்த்துக்கொள்வதற்கும் செயலமர்வுகள். குழுச்செயற்பாடுகள், நாடகப்பயிற்சி, தியானமுறைகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இவ்வாண்டு யாழ். மறைமாவட்டத்தில் அன்பிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் நம்பிக்கை வாழ்வை புதுப்பிக்கவும் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தவும் அன்பியம் தொடர்பான விளக்கங்களை அருட்பணியாளர்கள் மில்பர்வாஸ், லியோ ஆம்ஸ்ரோங் ஆகியோர் இப்பயிற்சியாளர்களுக்க வழங்கினார்கள். மேலும் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்தல், திருப்பலிக்கான முன்னுரை மன்றாட்டு எழுதுதல், திருவிவிலிய செப வழிபாடு தியானம், ஆகிய செயற்பாடுகளுக்கும் பயிற்றுவிக்கப்படடன .
திருவழிபாட்டில் திரு இசையின் முக்கியத்துவத்தை விளக்கி பாடல் பயிற்சியம் வழங்கப்பட்டது.
ஒருநாள் களப்பயணமாக சின்னமடு, சாட்டி யாத்தரைத் தலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பயிற்சியின் இறுதிநாளாகிய 06.02.2021 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நிலைய கேட்ப்போர் கூடத்தில் காலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது. யாழ். மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
முல்லைத்தீவு சிலாவத்தை பங்கில் அமைந்துள்ள வற்றாப்பளை புனித லூர்த்து அன்னை ஆலயம் அழகிய தோற்றத்துடன் புதிதாக நிர்மானிக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் புனித லூர்து அன்னை திருநாளுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளை ஆரம்பிப்பதன் அடையாளமான அன்னையின் கொடியும் ஆயர் அவர்களினால் ஏற்றிவைக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தையாக பணியாற்றிய அமரர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களினால் இவ்வாலயம் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போதைய பங்குத்தந்தையாக பணியாற்றும் இந்தியா நாட்டை சேர்ந்த கப்புசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு அலெக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இவ்வாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அவரின் தலைமையில் இந்நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இளவாலை புனித யாகப்பர் ஆலயம் புதிய பங்கானது.
இளவாலை பங்கின் ஒரு அங்கமாக இருந்து தற்போது 35 வருடங்களுக்கு பிற்பாடு ஒரு தனிப் பங்காக மாற்றப்பட்ட புனித யாகப்பர் ஆலய பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம் பெற்ற அருட்திரு ஜெயக்குமார் அவர்கள் 21.01.2021 வியாழக்கிழமை பணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் முன்னிலையில் இவர் தனது பணியை ஏற்றுக்கொண்டார்.இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்கில், இளவாலை புனித றீற்றன்னை ஆலயம், பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயம், வலித்துண்டல் புனித அன்னாள் ஆலயம் அத்துடன் மயிலங்கூடல் புனித வேளாங்கன்னி ஆலயம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.புதிய பங்கின் பங்குத் தந்தையாக பணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருட்திரு ஜெயக்குமார் அவர்களே இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும் நியமனம் பெற்றுள்ளார். இந்நிகழ்வுகள் இளவாலை பங்குத்தந்தையும் முன்நாள் இளவாலை மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்திரு யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் 1932 தொடக்கம் 1985 வரை மோலைத்தேய குருக்களுடன் இப்பங்கு தனிப் பங்காக இயங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு சுதர்சன் அடிகளார் 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாசன் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
16.01.2021சனிக்கிழமை அன்று யாழ். மறைக்கோட்ட பங்கு மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்திரு மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வொன்றுகூடலில் அன்பிய ஆண்டு, புனித சூசையப்பர் ஆண்டு விளக்க உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன. அன்பிய ஆண்டு கருத்துரையை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களும் புனித சூசையப்பர் ஆண்டு கருத்துரையை அருட்திரு அஜந்தன் அவர்களும் வழங்கினர். கருத்தமர்வின் நிறைவில் யாழ் மறைக்கோட்ட பங்குகளின் ஒவ்வொரு பங்கிலிருந்தும் மறைக்கல்வி இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு கூழாமுறிப்பு பங்கின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் 15.1.2021 வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. அருட்திரு நிருபன் அவர்கள் பங்குத்தந்தையாக பணிபுரிந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இவ்வாலயம் அருட்திரு நிக்சன் கொலின்ஸ் அவர்களின் காலத்தில் அழகிய தோற்றத்துடன் முழுமை பெற்று திறந்துவைக்கப்பட்மை இங்குகுறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் குருநகர் பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு யாவிஸ் அடிகளார் 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று காலை 5.30 மணிக்கு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்டத்தில் இவ்வருடம் பிரகடனப்படுத்தியுள்ள அன்பிய ஆண்டை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு 17.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.ஆயர் தலைமையில் காலை நடைபெற்ற திருப்பலியைத் தொடர்ந்து இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மில்பர் வாஸ் (கிளறேசியன் சபை) அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், பிரதிநிதிகள், இறைமக்களென பலரும் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் அவர்களினால் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் அன்பிய கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு மில்பர் வாஸ் அவர்களினால் அன்பிய ஆண்டின் இலட்சினைக்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அன்பிய இணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டார்கள்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பங்கின் புதிய பங்குத்தந்தையாகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வராகவும் நியமனம்பெற்ற அருட்திரு அன்ரனிப்பிள்ளை அடிகளார் 16.1.2021 சனிக்கிழமை பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் மாலை நடைபெற்ற திருப்பலியில் முன்நாள் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யாவிஸ் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கரம்பொன் புனித செபஸ்ரியார் ஆலய #130ம் ஆண்டு நிறைவு தினம் (1890 – 2020 )130ம் ஆண்டு நிறைவில் கரம்பொன் பங்குத்தந்தை அருட்திரு P .பத்திநாதன் அடிகளாரின் பணிக்காலத்தில் புலம்பெயர் ஆலய பங்கு மக்களின் நிதிப்பங்களிப்புடன் புனித செபஸ்ரியார் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு யாழ்..ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் 14.01.2021 (வியாழக்கிழமை) அன்று ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்.மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி செயற்பாடுகளை வெவ்வேறு தளங்களில் முன்னெடுத்துவரும் மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குனர்களுக்கான வருட செயல்திட்டங்களை முன்மொழியும் கூட்டம் 13.1.2021 புதன்கிழமை ஆயர் தலமையில் நடைபெற்றது.ஆயர் இல்லத்தில் நடைபெற இக்கூட்டத்தில் ஒவ்வொரு ஆணைக்குழு இயக்குனர்களும் அன்பிய ஆண்டை அடிப்படையாகக் கெண்ட ஆண்டு செயற் திட்டங்களை முன்வைத்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
ஊர்காவற்றுறை பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற அருட்திரு S.J.Q, ஜெயரஞ்சன் அடிகளார் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று பணிப்பெறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று காலை 7.00 மணிக்கு ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
05.01.2021 செவ்வாய்கிழமை ஊறணி, கங்கேசன்துறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் பிரான்ஸ் நாட்டின் துளிஸ் நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட புனித அந்தோனியர் திருச்சுருபம் யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாலை 4.30 மணிக்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் குரு முதல்வர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்றது. கடற்கரை வீதிப்பக்கமாக அமைக்கப்பட்ட புனிதரின் திருச்சுருபம் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் சில அன்பர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வுகள் ஊறணி பங்குத்தந்தை அருட்திரு T. E. தேவராஜன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றதுடான் புனிதரின் திருச்சுருபம் அமைக்கப்பட்ட அவ்விடத்தில் மீள்குடியேற்றத்தின் போது பங்கு பணிமனையை அடையாளப்படுத்த புனிதரின் திருச்சுருபம் அமைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.